LANKA HERMES

LANKAHERMES

Sunday, September 18, 2005

ஒரு மாதக் குறிப்பு

அமெரிக்க ஐக்கிய ராச்சியத்தின் மியாமியில் இருக்கும் குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றில் சுமார் 8 மாதங்களுக்கு மேலாகச் சிறையிருக்கும் எனது உறவினர் ஒருவர் வாசிக்கத் தமிழ் நூல்கள் கேட்டிருந்தார்.
ஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் மட்டுமே அவர் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்தின் இருபுற அட்டைகளும் கிழிக்கப்பட்ட பின்னர்தான் (அவை முகாமுக்கு உள்ளே ஆயுதமாகப் பாவிக்கப்படக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாக) புத்தகம் கையளிக்கப்படும். இதனால் பெரிய புத்தகங்கள் அனுப்புவதே நல்லது என்று தீர்மானித்து சுந்தரராமசாமியின் “காகங்கள்” சிறுகதைத் தொகுப்பு முதலிலும், பின்னர் “ஆண்கள் , பெண்கள், குழந்தைகள்” என்ற நாவலும் அனுப்பப்பட்டது. அனுப்பும் போதே அட்டையக் கிழித்து விட்டு அனுப்பினால் அஞ்சல் செலவாது குறையும் என்று இரண்டாவது நூல் அனுப்பும் போது அட்டைகளை அகற்றி விட்டேன். மனம் கொஞ்சம் பதைக்கத்தான் செய்தது.

இப்போது கல்கியின் “பொன்னியின் செல்வன்” மற்றும் சாண்டில்யன் எழுதிய சரித்திரப் பாணி நாவல்கள் வேண்டுமாம். அதுமட்டுமல்ல தடியருக்கு பெரியாரின் சிந்தனைகளும் வேண்டுமாம். ஐயையோ அவை பாகங்களாக வந்தவை என்றதும்...உள்ளிருக்கும் சகவாசிகளின் ஐந்து பெயர்களைத் தந்துள்ளார். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் ஒரே மாதத்தில் அனுப்பும் படி. இனும் 1 வருடமாத் இருப்பார் போலும். உள்ளிருக்கும் போது சிறு சிறு வேலைகள் செய்யலாம்...(துப்புரவு செய்தல், கண்டீன் உதவியாள்...இப்படியாக) நாளொன்றுக்கு 1 டாலர் கிடைக்கிறது...தொலைபேசிச் செலவுக்குச் சரியாகிவிடுகிறது என்கிறார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home