பழமுதிர் சோலை
மதுரையில் இருந்து வடகிழக்கில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அழகர் கோவில் இருக்கிறது. சரித்திரப் பிரியர்களுக்கு இந்த அழகர் கோவில் ஒரு பெரிய பொக்கிஷம். மேலதிக தகவல்களுக்கு பேராசிரியர் தொ. பரமசிவனிடம் கேளுங்கள். அழகர் கோவில் தாண்டி அதற்கும் கொஞ்சம் மேலே போனால் பழமுதிர்சோலை. பழமுதிர்ச்சோலைக்குச் செல்லும் வழியில் வழிப்பறிக்கென்றே விசேட பயிற்சி பெற்ற வானரங்களை அங்கே காணலாம்.இந்தியா முழுவதும் நான் கண்ட குரங்குகளில் பழமுதிர்சோலைவாழ் அந்த வழிப்பறி வீரர்கள்-வீராங்கனைகளுக்கு முதல் பரிசு கொடுக்கலாம். பக்தர்களிடம் பொரி பறித்து கீழ்த்தாடைகளுக்குள் தேக்கிவைத்துக் கொள்வதால் அல்லது தொடர்ந்து ஒரே வகை உணவினால் ஏற்பட்டிருக்கும் ஒரு வகை நோயோ தெரியவில்லை.அனேக குரங்குகளின் கீழ்த் தாடையின் இரண்டு புறமும் பருத்துக் கிடக்கின்றன. தேக்கிய பொரியை இரைமீட்க முடியுமோ தெரியவில்லை.

பழம் உதிர் சோலையில் ஒரு பக்த மனோபலம்!!!

பழம் உதிர் சோலையில் ஒரு பக்த மனோபலம்!!!




































0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home